இதை பாருங்கள் பீட்டா உறுப்பினர்களே.. வைரல் வீடியோ.

ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன என்ற காரணத்தை கூறி, பீட்டா அமைப்பு 2014ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிக்கு நீதிமன்றம் தடைவிதித்தது. எனவே, அந்த தடையை விலக்க வேண்டும் மற்றும் பீட்டா அமைப்பிற்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழகம் எங்கும் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காளைகள் மனிதர்களிடம் பாசமாக பழக்கூடியவை என்பதை நிரூபிக்கும் வகையில், ஜல்லிக்கட்டு காளை ஒன்று,  ஒரு குழந்தையிடம் பாசமாக விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad