இலங்கையில் இணையத்தளங்கள் ஊடாக தகாத தொழிலுக்காக விற்பனை செய்வதற்கு சுமார் 27000 பெண்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியிருக்கின்றது.
இவர்களில் பலரும் நடத்தைப்பிறழ்வான தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் என்றும் கூறப்படுகிறது. அவர்களில் சிலர் தனியார் துறை மற்றும் அரச துறைகளில் தொழில் புரிந்து ஓய்வு நேரங்களில் இவ்வாரு தகாத தொழிலில் ஈடுபடுபவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்களில் பலரும் கொழும்பு உட்பட மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், குறைந்த வயது யுவதிகள் தொடக்கம் 40, 45 வயதுக்கு இடைப்பட்டவர்களும் இதில் காணப்படுகின்றதாகவும் கூறப்படுகின்றது.