யாழில் 6 வயது சிறுமி துஷ்பிரயோகம்: பின்னணியில் உறவினர்

யாழ்.இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று பகுதியில் நேற்றைய தினம் ஆறு வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இளவாலை பகுதியில் இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்வு ஒன்றின் போதே உறவினர் ஒருவரால் குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

காவல் நிலையத்தில் முறைப்பாடு யாழில் 6 வயது சிறுமி துஷ்பிரயோகம்: சந்தேகத்தின் பின்னணியில் உறவினர்

இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து இளவாலை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் பல்வேறு இடங்களிலும் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad